ஞாயிறு, 31 ஜூலை, 2016

துகில்



துகில்
====================================ருத்ரா இ.பரமசிவன்.

கை சோர்ந்ததாமே
துச்சாதனனுக்கு!
வெண்பட்டு உடுத்திய
ஜன நாயகத்தை
துகிலுரிக்க
கருப்புத்துச்சாதனர்களுக்கு
கை சோர்ந்துபோகவே இல்லை.
இங்கே
வேர்வை அருவிகள் உண்டு.
வெந்து போக உடல்களும் உண்டு.
மக்கள் எனும்
மலிவுப்பதிப்பில்
ஜன நாயகம்
இங்கே
எண்ணிக்கையில் பெரும்பான்மை.
சிந்தனையில் சிறுபான்மை.

=============================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக