ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மூன்று கவிதைகள்




மூன்று கவிதைகள்
============================================
ருத்ரா



நியாயங்கள்


என்ன செய்து விடப்போகிறாய்?
கிழிச்செ!
இது என்ன‌
அவமானமா?
ஆவேசமா?
அலட்சியமா?
தராசு தட்டு அசைவுகள் கூட‌
இங்கு வெறும் 
ஃபாசில்கள்.

_______________________________________



கீதை


ஒரு கன்னதில் அறைந்தால்
இன்னொரு கன்னத்தில் காட்டு.
முதல் கன்னம்
உன்னுடையது!
இரண்டாவது கன்னம்
அவனுடையது.

_______________________________________________


வாய்தா


காலத்தின்
முதுகெலும்பு
வளைந்து வளைந்து
நொறுங்கியே போனது.
சுத்தியலுக்கும் வலிக்கவில்லை.
மேஜைக்கும் வலிக்கவில்லை.
ஆர்டர்! ஆர்டர்!

_________________________________________________


ஞாயிறு, 31 ஜூலை, 2016

துகில்



துகில்
====================================ருத்ரா இ.பரமசிவன்.

கை சோர்ந்ததாமே
துச்சாதனனுக்கு!
வெண்பட்டு உடுத்திய
ஜன நாயகத்தை
துகிலுரிக்க
கருப்புத்துச்சாதனர்களுக்கு
கை சோர்ந்துபோகவே இல்லை.
இங்கே
வேர்வை அருவிகள் உண்டு.
வெந்து போக உடல்களும் உண்டு.
மக்கள் எனும்
மலிவுப்பதிப்பில்
ஜன நாயகம்
இங்கே
எண்ணிக்கையில் பெரும்பான்மை.
சிந்தனையில் சிறுபான்மை.

=============================================